நேற்று அபுதாபி “பாரதி நட்புக்காக ” அமைப்பினர் நடத்திய “வண்ணத் தமிழ் தாயே” நிகழ்வு அபுதாபி சூடன் கலாச்சார மைய்யாத்தில் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் தமிழருவிமணியன் கவிஞர் யுகபாரதி , முனைவர் பர்வீன் சுல்தானா,மோகனசுந்தரம், இசைகவி ரமணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழருவியின் அமைதியான தெளிவான பேச்சு,மோகன சுந்தரத்தின் நகைசுவை ,ரமணனின் பாடலோடு கலந்த உரை ,இலக்கிய ராட்சசி பர்வின் சுல்தானாவின் சங்ககால இலக்கியம் குறித்த அழகு தமிழ் சொல்லாடல் ….
தனி ஆவர்த்தனமாய் கவிஞர் யுகபாரதியின் “கண்ணம்மா ” தலைப்பில் சொற்பொழிவு என் நிறைவாய் ஒரு மாலைப்பொழுது கழிந்தது .
சென்ற வருடம் நடந்த நிகழ்ச்சியின் போது எடுத்த சில புகைப்படங்களை முனைவர் பர்வீன் சுல்தானவிற்கு பரிசாக வழங்கினேன் …ஆச்சரியத்துடனும் ,வியப்புடனும் ,மகிழ்வோடு வாங்கிக் கொண்டு நன்றி சொன்னார் . எங்கே இருந்தாலும் அவங்க எங்க ஊர்காரங்க தானே …
புகைப்படங்களை அருமையாக பிரிண்ட் செய்து தந்த நண்பர் Bilal Aliyar க்கு மிக்க நன்றி.